Friday, 27 December 2013

வெற்றியை சொந்தமாக்குவது எப்படி?





எந்த உயிரினத்தையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. இறைவன் எல்லாப் பறவைகளுக்கும் உணவளிக்கிறான். ஆனால், அதைக் கூட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பதில்லை. உங்களுக்கான புதையலை நீங்கள் தாம் தேட வேண்டும். தேடும் முயற்சியில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் இந்த நூலை படியுங்கள். உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த உதவும் தூண்டுகோல்களின் சாரம் இந்நூல்!

-
பதிப்பகத்தார்


Thursday, 26 December 2013

மக்கள் மனசு - 3


முன்பெல்லாம் சபரிமலைக்கு மாலைபோடும் பக்தர்கள் 48  நாட்கள் கடுமையான விரதத்தை  பயபக்தியோடும்,  புனிதத்தன்மையோடும் கடைப்பிடித்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லுவார்கள். இப்போது  காலையில் மாலை போட்டு, இரவில் இருமுடிகட்டிக்கொண்டு கோயிலுக்கு செல்பவர்கள் அதிகமாகி  விட்டதால், முன்பு போல் இப்போது யாரும் அவ்வளவு பயபக்தியோடு கோயிலுக்கு செல்வது  இல்லை, பக்தர்களிடம் புனிதத்தன்மை குறைந்து கோயிலின் மகிமை கெட்டு விட்டது என்பது பற்றி.........

பக்தர்களின் புனிதம் போய்விட்டது. ஆலய மகிமை கெட்டுவிட்டது என்பதெல்லாம் சுத்த பேத்தல்!
நன்றி : பாக்யா வார இதழ்

Wednesday, 11 December 2013

பிரசவ அரங்கேற்றம்


எங்களை பகலவனாக்க
பராசக்தியிடம் சக்தி கேட்டவனே

உன் இறுதிச்சடங்கில்
உன்னை மொய்த்த ஈக்களை விட
வந்தவர்கள் குறைவாம்

வாசித்த போது வருத்தம் மட்டுமல்ல
கோபமும் கூடவே
எங்கள் முந்தைய தலைமுறை மீது

ஒரு தலைமுறை மீதே
கொண்ட கோபம் தான்
எங்களை முந்நிலும் எழுச்சி பெற செய்தது

நீஏற்றி வைக்க ஆசைப்பட்ட விளக்குகளில்
ஆர்வம் கொள்ள வைத்து
துலங்கி தூண்டச்செய்தது

உன் கனவுகளை நனவாக்கி
கைமாறு செய்ய
நாங்கள் கை கோர்த்தோம்

தனித்து கிடந்த நாங்கள்
தரணி ஆள புறப்பட்டோம்

வீட்டுக்குள் முடக்கி வைத்த
மூடப்பழக்கங்களை உடைத்து
விண்ணுக்கு சென்று வந்தோம்

சாதியின் சாயத்தை
எங்களின் காதலில்
கரைத்து எடுத்தோம்

ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை
என காட்ட
ஆளுமைக்கு வந்தோம்

உன் கனவுகள்
அள்ள அள்ள குறையா அட்சய பாத்திரம்

அதில் சிந்தியதைமட்டும்
செயலாக்க எங்களுக்கு
ஒரு தலைமுறை போதவில்லை

ஆகவே தான்
உன் கனவுகளில்
எஞ்சியதை அர்த்தப்படுத்த
எங்களையே பிரசவித்துக் கொள்கிறோம்
அடுத்த தலைமுறையாய்!

நன்றி : மகாகவி