அடுத்து என்ன செய்யப் போகிறாய்? என்பதற்கான பதில் உன்னிடம் இல்லாது போனதற்காக வருத்தப் படாதே. எதுவும் செய்யாமல் இருக்கப் போவதில்லை என்பதில் திடமாய் இரு. அது போதும்.
நேரத்தின் அருமை தெரியாதவனிடம் வழிகாட்டலைப் பெறக் காத்திருப்பதற்குப் பதி்லாக அதை வேறு வழிகளில் பெறுவதற்கு முயற்சி செய்.
உண்மையற்ற ஒன்றை வெகு இயல்பாய் சொல்ல ஆரம்பிப்பவனிடம் கவனமாய் இரு. அவனுடைய தந்திரங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உன்னையவும் கூர் பார்க்கக் கூடும்.