மகளுடனான உரையாடலின் போது, ”மூன்று வரியில் கவிதை இருந்தால் அதுக்கு ”ஹைக்கூ” ன்னு பேராம்ல” என்றாள்.
ஹைக்கூ என்பது தனி வடிவம். அதன் பல வரையறைகளுள் ஒன்று மூன்று வரியில் இருக்க வேண்டும். அந்த வரையறையை மட்டும் மனதில் கொண்டு எழுதப்படும் மூன்று வரிக் கவிதைகளை இப்பொழுது எல்லோரும் ஹைக்கூ என அழைத்து வருகிறார்கள் என்றேன்.
அப்படியா? என்றாள்.
என்ன திடீர்னு கவிதை மேல ஆர்வம்? என்றேன்.
எங்கள் தமிழ் பாடத்தில்
”இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?” –