Wednesday, 22 January 2020

கவிதை என்ன செய்யும்?

மகளுடனான உரையாடலின் போது, ”மூன்று வரியில் கவிதை இருந்தால் அதுக்குஹைக்கூ”  ன்னு பேராம்லஎன்றாள்.

ஹைக்கூ என்பது தனி வடிவம். அதன் பல வரையறைகளுள் ஒன்று மூன்று வரியில் இருக்க வேண்டும். அந்த வரையறையை மட்டும் மனதில் கொண்டு எழுதப்படும் மூன்று வரிக் கவிதைகளை இப்பொழுது எல்லோரும் ஹைக்கூ என அழைத்து வருகிறார்கள் என்றேன்.

அப்படியா? என்றாள்.

என்ன திடீர்னு கவிதை மேல ஆர்வம்? என்றேன்.

எங்கள் தமிழ் பாடத்தில்

இந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்?” –

Wednesday, 15 January 2020

பொங்கல் நல்வாழ்த்துகள் - 2020

கரும்பை கடித்துத் தின்னும்

திராணி இழந்தோம்.

பனைகளை சூலைகளுக்குத் தநது விட்டு

கிழங்குகளுக்கு அழைந்தோம்.

மஞ்சள் கிழங்கின் உரிமையை மாற்றான்

உரிமை கொண்டாடும் வரை உறங்கினோம்.

வயலோர பொங்கல் பூவைப்

பொக்கைப் பூவாக்கி வாங்கி வந்தோம்.

உணவிட்டவனின் வயிற்றுப்பசிக்கு

வயல் எலிகளைக் கொடுத்தோம்.

வீரம் போற்றும் விளையாட்டை நடத்த

 நீதிமன்ற படிகளில் காத்திருந்தோம்.

பழையன கழிதல் என

பொங்கலை அழுக்காக்கினோம்.

இருந்து விட்டுப் போகட்டுமே  என

நீ சொல்கிறாய்.


நானும் ஆமோதிக்கிறேன்

"பொங்கல் நல்வாழ்த்துகள்" என்ற ஒற்றை வரியோடு!


Friday, 10 January 2020

சிகைத் தாய்

நேர்த்திஎன்பதைச் சிரம் மேற்கொண்டு செய்யக்கூடிய தொழிலாளர்களில் சிகை அலங்கார கலைஞனுக்கு எப்பொழுதுமே தனித்த இடம் உண்டு. ஒற்றைச் சீப்பும், சாணை பிடித்த கத்தியும் அவனின் கேடயமாகவும், ஆயுதமாகவும் மாறும் போது அதன் வெற்றி அவனை விடவும் நமக்கே உரியதாகுகிறது.  

நமக்குள் அடங்கியிருக்கும் வசீகரத்தைக் களைந்தும், கழைத்தும் நேர்த்தியாக்குபவனாக அவன் இருப்பதால் நமக்கும் நெருக்கமானவனாக இருக்கிறான்.   

தேவையில்லாததை தேவைக்கேற்ப நீக்குவதன் மூலம் நம்மைநம் முகத்தைநம் அடையாளத்தை மற்றவர்களுக்கு அருகில் நகர்த்தும் அரும் பணி செய்ய அந்த கலைஞனுக்குப் பத்து நிமிடங்கள் போதுமானதாக இருக்கிறது. அந்த பத்து நிமிடத்தில் அவனால் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளின் வரிவடிவம்சிகைத் தாய்”.