Wednesday, 11 February 2015

ரசிக்க – சிந்திக்க – 3

தன்னிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்த சிறுவனிடம் இன்று பயிற்சியாட்டத்தில் நன்றாக விளையாடினாயா? எத்தனை ஓட்டங்கள் எடுத்தாய்? என்று கேட்டார் பயிற்சியாளர். அந்த சிறுவனோ தன் நண்பர்கள் விளையாடிய கிரிக்கெட் மேட்சை பார்க்கச் சென்றிருந்ததால் பயிற்சியாட்டத்திற்கு செல்லவில்லை என்றான்

கோபம் கொண்ட பயிற்சியாளர் பளீர் என சிறுவனின் கண்ணத்தில் ஒரு அறைவிட்டார். பின்னர் அந்தச் சிறுவனிடம்யாரோ விளையாடுகின்ற மேட்சை பார்த்து கைதட்டப் போய் இருக்கிறாயே…….. உனக்கு அசிங்கமாக இல்லை. உன்னைப் பார்த்து மற்றவர்கள் கை தட்டி பாராட்ட வேண்டாமா? நீ மற்றவர்களுக்காக கை தட்டப் போகிறாயா? அல்லது மற்றவர்களிடமிருந்து நீ கை தட்டு வாங்கப்போகிறாயா? முடிவு செய்து கொள்என்றார். அந்த வார்த்தை அந்த சிறுவனின் வாழ்வை மாற்றிப் போட்டதுஅதன்பின் நாள் தவறாமல் பயிற்சி செய்து வந்த அந்த சிறுவன் பின்னாளில் உலகமே வியக்குமளவுக்கு புகழ் பெற்றான். அந்த சிறுவன் தான் சச்சின் டெண்டுல்கர்!

வடிவம் மாறியிருந்த ஊரில்....

 நன்றி : தமிழ்முரசு நாளிதழ்

                  கணையாழி.

புகைப்படம் - 10

புத்தகக் கண்காட்சியில் என் நூலுடன் நண்பர் தேவா


Tuesday, 10 February 2015

காலப் பெருவெளி

சிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் வெளியிட்ட முப்பது கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய காலப் பெருவெளி தொகுப்பில் இடம் பெற்றுள்ள என் இரண்டு கவிதைகள்

 

புழுதி பறக்கப் புழங்கிய வீதிகளில்

கான்கிரீட் கலவைகள்

வண்ணப் பெயர் பலகைகளுடன்

திருத்தமாய் தெருக்கள்

கால்நடையாய் போனவர்களின்

கைகளில் இருசக்கர வாகனங்கள்

ஓடுகளாகவும், மாடிகளாகவும்

உருமாறியிருந்த கூரைகள்

தொலைக்காட்சி அலைவரிசைகளில்

தொலைந்து போன முற்றங்கள்

தும்பிகள் பிடிப்பதையும் காளாண் பறிப்பதையும்

மறந்துவிட்ட குழந்தைகள் - என

அயலகம் சென்றிருந்த வருடங்களில்

வடிவம் மாறியிருந்த ஊரில்

மாறாமலே இருந்தது

கோடாரித் தைலமும்

பச்சைக் கலர் இடைவாரும் இருந்தா கொடேன்

என்ற கோரிக்கைகள் மட்டும்!