அசுரர்களின் அரசனான ரம்பா என்ற அசுரன் ஒருநாள் நதிக்கரையோரம் வந்து கொண்டிருந்தான். அந்நதியில் ஒரு பெண் எருமைமாடு குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். முற்பிறவியில் அழகிய இராஜகுமாரியாக இருந்து சாபத்தால் எருமையாக மாறியிருந்த அந்த பெண் எருமையின் மேல் மையல் கொண்டு தன்னை ஒரு ஆண் எருமையாக மாற்றிக்கொண்ட ரம்பா அதனுடன் கூடி மகிழ்ந்தான். உருவில் எருமை மாடுகளாக இருந்த அவ்விருவருக்கும் பிறந்தவன் மகிஷாசுரன். மற்றவர்களை துன்புறுத்திப் பார்ப்பதிலேயே சுகம் காணும் அசுரகுலத்தில் பிறந்திருந்த போதும் அவனுக்குள்ளும் நல்ல குணங்கள் இருந்தது. படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து மனிதனாலும், மிருகத்தினாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான். வரம் பெற்றவுடன் அவனுக்குள் இருந்த பிறவி அசுரகுணம் வெளியே வர ஆரம்பித்தது.
Monday, 20 November 2017
Tuesday, 31 October 2017
வெற்றிக்கு அச்சாரமிட்ட வெயிலுகந்த விநாயகர்
பல வீடுகளில் மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒத்துப் போகாது. இருவருக்குமான உரசலில் அம்மா பக்கமா? மனைவி பக்கமா? என முடிவெடுக்கத் தெரியாமல் ஆண் விழி பிதுங்கிப் போவான். சில வீடுகளில் இந்த நிலை அப்படியே தழைகீழாக இருக்கும். மாமனாருக்கும், மருமகனுக்கும் ஒத்துப் போகாது. அப்பாவா? கணவனா? என முடிவெடுக்க முடியாமல் பெண் பரிதவித்துப் போவாள். மனித குலத்துக்கு மட்டுமே வாய்த்த இப்படியான சிக்கல்களில் சில சமயம் இறைவனும் சிக்கிக் கொள்வதுண்டு.
Sunday, 22 October 2017
புனித யாத்திரை புறப்படுவோம்!
Wednesday, 27 September 2017
இத்தனை மெனக்கெடல் அவசியமா?

நாள் : 1
எங்க மிஸ் கல்யாணத்துக்கு நீங்க
என்ன கிஃப்ட் (GIFT) செய்யப் போறீங்க?
நான் செய்றது இருக்கட்டும். நீயும், உன் தம்பியும் என்ன செய்யப் போறீங்க?
நான் ஸ்டுடியோவுல காட்டுன மாடல் மாதிரி செஞ்சு கொண்டு வந்து தந்துடுங்க. அதை நாங்க கிஃப்டா செஞ்சிடுறோம்.
அதுக்கு போட்டோவெல்லாம் வேணுமே. மிஸ்கிட்ட யாரு கேட்கிறது?
நான் கேட்கிறேன்.
அலைபேசியில் பேசி முடித்ததும், மிஸ் தருறேன் சொல்லி இருக்காங்க.