Saturday, 28 December 2019

சுய சரிதை எனும் “சொரிதல்கள்”

கவிஞர். வைரமுத்து தன் சுய சரிதையின் இரண்டாம் பாகத்தை எழுத அனுமதி கேட்ட போது அப்போதைய ஆனந்த விகடனின் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள்வேண்டாம்எனச் சொல்லி விட்டாராம். முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தில் உண்மைத் தன்மை இருக்காது என்பதை காரணமாகச் சொன்னாராம்அதன் பிறகேகள்ளிக்காட்டு இதிகாசம்எழுத ஆரம்பித்தார். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலின் பிந்தைய பாகங்களில் அவர் உண்மைகளை மேம்போக்காகச் சொல்லிச் சென்றதால் அதில் அத்தனை லயிப்பில்லை என சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்

சுய சரிதைகளில் பல உண்மைகளைச் சொல்ல வேண்டும் என்பதாலயே ஆர்.வி. வெங்கட்ராமன், சோ ராமசாமி, டி.என்.சேஷன் ஆகியோர் வாய்ப்பும்வசதியும் இருந்தும் அதைச் செய்யவில்லை என வாசித்திருக்கிறேன்சுய சரிதை எழுதுவது என்பது அவ்வளவு சிக்கலானது. சிலாகித்து எழுத முடியாதது

Sunday, 22 December 2019

அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு

 "அந்தமான் - செல்லுலார் சிறை ஒரு வரலாறு" குறித்து தன் நேரடி பயண அனுபவத்துடன் எழுத்தாளரும், காம்கேர் நிறுவனத்தின்  நிறுவனருமான உயர்திரு.  புவனேஸ்வரி  அவர்கள் முகநூலில் எழுதிய அறிமுகம்.

சென்ற வருடம் குடும்பத்துடன் அந்தமான் பயணம். அங்கு சுற்றுலா தளமாகியிருந்த அந்தமான் செல்லுலார் சிறையில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி

அந்தமான் சிறையில் கொடுமைகளை அனுபவித்த நம் இந்திய வீரர்களின் தியாகத்தை உண்மை சம்பவம் போல நாடகமாக செய்து காண்பித்தார்கள்

நிகழ்ச்சி பொதுவாக மாலை நேரங்களில் மட்டுமே. ஏனெனில் அப்போதுதான் சிறை அறைகளில் விளக்கு வெளிச்சத்தைக் கொடுத்து எந்த அறையில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்கள் பார்க்கவும் கேட்கவும் முடியும் என்பதால் அந்த ஏற்பாடு.

சிறைச்சாலை அறைகளில் இருந்து சிறை அதிகாரிகளின் கொடூரமான பேச்சுகளும், அவர்களின் பூட்ஸ் காலடி சப்தங்களும், அவர்கள் செய்கின்ற கொடூரங்களும், கைதிகளின் கூக்குரல்களும் நிஜமாகவே நடப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி

அபிப்ராயங்களுக்கு அப்பாற்பட்ட குழந்தைகள் உலகம்!

குழந்தைகளுக்கு துணிகள் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தேன். பணம் செலுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். மகனும், மகளும் கடைக்கு உள் பகுதியில் இருக்கும் பணம் செலுத்தும் இடத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கு கூட்டம் குறைவாக இருக்கிறதா எனப் பார்க்கப் போகிறார்களோ? என்று நினைத்தேன்.  

 

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தவர்கள், "டாடி………….அந்தக் கவுண்டருக்குப் பக்கத்துல ஒரு சின்ன பாக்ஸ் இருக்கு. அதுல ஆதரவற்றவங்களுக்கு டொனேஷன் போட்டிருக்காங்க. நாங்களும் அதுல காசு போடணும். சில்லரை கொடுங்கள்என்றார்கள். ஆளுக்கு ஒரு பத்து ரூபாய் தாளைக் கொடுத்தேன். அவ்வளவு வேண்டாம். இருவருக்கும் சேர்த்து பத்து ரூபாய் தாருங்கள் போதும் என்றார்கள்.

Friday, 13 December 2019