Friday, 7 February 2014

அவஸ்தையிலிருந்து மீளல்

மகளோடிருந்த தினப்பொழுதொன்றில்

திருகல் படாமல் கிடந்த 
கீறலற்ற வெள்ளை காகிதத்தை
நான்காய் மடித்து பந்தாக்கியும்
எட்டாய் மடித்து விமானமாக்கியும்
பத்தாய் மடித்து பறவையாக்கியும் காட்டினேன்.

சிதறாப் புன்னகையோடு
என் விரல்களுக்குள் இருந்து தன் விரல்களுக்குள்
காகிதத்தை மாற்றிய மகள்
மடிப்புகளை நீக்கி மென்மையாய் நீவி
தன் தம்பியிடம் தந்து
அப்புறமா எடுத்துக்கலாம்…….இப்ப வச்சுக்கோ என்றாள்.

அவஸ்தையினின்று மீண்ட காகிதம்
எந்த சலனமுமின்றி தயாரானது
இன்னொரு அறையப்படலுக்கும்

அதன் வழி உயிர்த்தெழலுக்கும்.

நன்றிஎதுவரை?


நினைவுகள் குழைந்த தருணம்

பெற்றோர்

மனைவி

பிள்ளைகள்

நண்பர்கள்என

எல்லோருக்கும் ஏதோ ஒரு

நினைவுகளை தருபவனாகவே

துயில் கொண்டிருந்தான்.

 

சடங்கேந்தி வந்த உறவினர்கள்

பொணத்த எப்ப தூக்குறாங்க? என

விசாரிக்கும் வரை.


நன்றிஎதுவரை?

Tuesday, 4 February 2014

துளிப்பாக்கள்

கர்ப்பகிரகத்திற்குள் இருப்பவனும் சாமி
கற்பூரம் காட்டுபவனும் சாமி
முட்டாளாய் பக்தன்!

  •  

யாருக்கு முதல் பரிவட்டம்
முட்டிக்கொண்ட பங்காளிகள்
இரசித்தபடி கடவுள்.


தீயில் குளித்தாள்
தீயால் குளிக்க வைத்தாள்
கணவனின் கறை போக்க.


நன்றி : தீக்கதிர் - வண்ணக்கதிர்