Monday 5 November 2012

நிம்மதி தேடி

செருப்பை
எங்கு மறைவாய் வைப்பது?

அர்ச்சனையை
யார் பெயருக்கு செய்வது?

உடைக்க வாங்கிய தேங்காய்
எப்படி இருக்கப் போகிறது?

தட்டோடு நிற்பவர்களுக்கு தர
எவ்வளவு சில்லரை இருக்கிறது?

இப்படியான குழப்பங்களோடு
நிம்மதி தேடி
சந்நிதி நுழைந்ததும்
அர்ச்சகரின் குரல் ஒலித்தது

நடை சாத்தி
நாழியாயிற்று.

நன்றி : திண்ணை