Wednesday 9 January 2013

பெய்யாகும் புலம்பல்கள்



எதுவும் சாதகமாக இல்லை.
எவரும் உதவிக்கரம் நீட்டவில்லை.
விதியோ
விடாது சதிராடுகிறது
தோல்வியோ
அதன்போக்கில் விரட்டுகிறது
இப்படியானப் புலம்பல்களின்
செவியேறும் தருணங்களை
தகர்த்தெறிந்து மாயையாக்குகிறது.

மண்ணும்
நீரும்
உரமும்
எவரும் இடாமலே
கொழுக்கொம்பின்றி
உயிர் பிடித்து
பாறையிடுக்கில்
எழுந்து நிற்கும் அந்த சின்ன செடி!

நன்றி : காற்றுவெளி