Wednesday 2 October 2013

மலடியாகவே

அணிந்தும் அணியாத ஆடை
வலிந்துத் திணித்த உதட்டுச்சாயம்
சிணுங்கி அழைக்கும்
ஒய்யாரச் சிரிப்பு
உந்தித் தள்ளும்
உயிரற்ற காமம்என
கடைவிரித்துக் காத்திருப்பவளிடம்
புதைந்து கிடக்கிறது
பல புணர்தலுக்குப் பின்னும்
மலடியாகவே மலரும் தந்திரம்.

நன்றி : உயிரோசை