Friday 1 March 2013

கடவுளுக்கு வந்த சோதனை

சும்மாயிருந்த கடவுளை
அணிகல அலங்காரத்தோடு
வீதி உலாவுக்கு
அழைத்து வந்தான் மனிதன்

வீதிக்கு வந்த கடவுளை
எந்த வழியில் அழைத்துப்போவது
என்பதில் தொடங்கியது பீதி

ஆளுக்கொரு சர்ச்சையில்
காணாமல் போனது கடவுளின் அர்ச்சனை

வாய்ச் சண்டை
கை சண்டையாகிக் கலவரமானது
கலவரத்துக்கான ஆள் சேர்ப்பு பணியில்
தனித்து விடப்பட்டான் கடவுள்

வீதி உலா போகவந்தவன்
வீதியிலேயே நின்றான்
விக்கித்துப் போய்

கடவுள் மட்டும் தான் சோதிப்பானா?
சமயங்களில்
மனிதனும் சோதிப்பான் கடவுளை!

நன்றி : வார்ப்பு