Monday 11 March 2013

கோபி சரபோஜி கவிதைகள்

நிராயுதபாணியான நான்
போர் தர்மங்களை உன்னிடம்
போதிப்பதில் நியாயமில்லை தான்.

ஆனாலும் -
தயவு செய்து நிறுத்து
என்னில் உன்னை
கூர் தீட்டிப் பார்க்கும் யுத்தத்தை.
---------------------------------
இறந்தவனுக்காக
இரங்கற்பா பாடுகின்றான்
இருப்பவனின்
இருட்டுக்கு வெளிச்சம் ஏற்றாதவன்.
---------------------------------
பல முனைகளிலிருந்தும்
நதிகளைப் போல நகர்ந்து போகின்றோம்
நாடிழந்தவர்கள் என்ற ஏளனச்சொல்லோடு.

நதிகள் சங்கமிக்கும் ஓர் தினத்தில்
மீட்டெடுக்க மீண்டு வருவோம்.
அடைமழையாய்....ஆழிப் பேரலையாய்!
-----------------------------------

நன்றி : தழல்