Thursday 28 March 2013

எதார்த்தம்

முகம் பார்த்தால்
பயணச்சீட்டொன்று
இரவலாகி விடுமோ? –என்ற
அகக் கணக்கில்
முகம் பார்த்தும்
பார்க்காத பாசாங்கில்
பயணப்பட பழகிவிட்டன
புறக்கண்கள்.
---------------------------------------------
கிளி ஜோசியத்திற்காக
நான் தரும் இரண்டு ரூபாய்க்கு
எனக்கு எப்படியோ
நெல் இரண்டுகொறிக்க
உத்திரவாதம்
எப்படியும் உண்டு கிளிக்கு.
---------------------------------------------

வாங்கிப் போட்டதோ
இருவர் தூங்க
இடவசதியுள்ள கட்டில்.
நித்தம் தூங்குவது என்னவோ
நீயோ-
நானோ - மட்டும் தான்