Sunday 10 March 2013

காத்திருங்கள்

அச்சமின்றி
அமைதியாய்
பதட்டமின்றி
பொறுமையாய் இருங்கள்.

நீங்கள்
தேடுவது போல எதுவும்
காணாமல் போகவுமில்லை
கள்வாடப் போகவுமில்லை.

தேடுகின்ற போதிமரம்
அகிம்சை
அன்பு
வீரம்
விவேகம் - இவையெல்லாம்
களமிறங்கி இருக்கின்றன
கணக்கெடுப்பு பணிக்காக
நூறு கோடியில்
எத்தனை கோடி
புத்தனும்
காந்தியும்
தெராசாவும்
விவேகானந்தரும் - கிடைப்பார்கள் என
தெரிந்து கொள்ளும் ஆவலில்

இந்த தலைமுறையில்
இல்லாவிட்டாலும்
அடுத்த தலைமுறையிலாவது
கணக்கெடுப்பை முடித்துவிட்டு
அதனதன் இடத்திற்கு
அவைகள் திரும்பி விடும்.

அதுவரையிலும்காத்திருங்கள்
நூறு கோடியில்
சில கோடியில்லாவிட்டாலும்
ஒரு நூறூபேராவது
கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு...!

நன்றி : திண்ணை