Friday 15 March 2013

தனித்துவம்

தானே நதியை
நகர வைப்பதாய்
சொல்கிறான்  தலைவன்.

அந்த தலைவனுக்கு
தன்னுயிரும் கொடுப்பதாய்
முழங்குகிறான் தொண்டன்.

தலைவனின் தந்திரமும்
தொண்டனின் தரித்திரமும்

தன்னைத் தீண்டிடாத
தனித்துவத்தோடு
தன்போக்கில் நகர்கிறது நதி!

நன்றி : சிகரம்