Tuesday 6 December 2016

காழிநகர் நாயகன் சீர்காழி உ. செல்வராஜு

மறைந்த வெற்றியாளர்கள் தந்து போன வழிகாட்டல்கள் சார்ந்த அனுபவங்களை விட நம் காலத்தில் வெற்றி பெற்று நம்மோடு பயணிப்பவர்கள் தரும் அனுபவங்கள் காலத்தோடு இயைந்தவைகளாக இருக்கும் என்பது இத்தொகுப்பின் உருவாக்கத்திற்கு அடிப்படையான காரணம் என்பேன்

பல நூறு பக்க சுயமுன்னேற்ற நூல்களை வாசித்து நீங்கள் பெறும் அத்தனை உள்ளார்ந்த விசயங்களையும் இத்தொகுப்பில் விரவி நிற்கும் நிகழ்வுகளின் வாயிலாக உங்களால் நிச்சயம் பெற முடியும்.